7th pay Commission, பம்பர் செய்தி அகவிலைப்படி அரியர் குறித்த முக்கிய அப்டேட்!...
18 மாதங்களாக நிலுவையிலுள்ள அகவிலைப்படி நிலுவைத் தொகையை ஒரே முறை கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிவாரண செய்தி வந்துள்ளது. 18 மாத அகவிலைப்படி நிலுவை குறித்து மோடி அரசு விரைவில் முடிவெடுக்கும். அகவிலைப்படி தற்போது 31 சதவீதமாக உள்ளது, ஆனால் ஜூலைக்கு முன் இது 17 சதவீதமாக இருந்து கொரோனா பெருந்தொற்று காரணமாக அகவிலைப்படி 2020ஆம் ஆண்டு முடக்கப்பட்டது. நிலமை சற்று சீராகவே இது ஜூலை 1ஆம் தேதிக்கு முன்பு இருபத்தி எட்டு சதவீதமாகவும் பின்னர் முப்பத்தி ஒரு சதவீதமாகவும் அதிகரிக்கப்பட்டது. ஆனால் ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரையிலான அகவிலைப்படி நிலுவைத் தொகை இன்னும் பெறப்படவில்லை.
கிறிஸ்துமஸுக்கு முன் பெரிய அப்டேட் வரக்கூடும்
அமைச்சரவை செயலாளருடன நடைபெறும் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பரில் கிறிஸ்துமஸுக்கு சற்றுமுன் அமைச்சரவை செயலாளருடன ஒரு சந்திப்பு இருக்கலாம். அதில் இந்த பிரச்சனை விவாதிக்கப்பட உள்ளது. இருப்பினும் மத்திய ஊழியர்களுக்கு d.a. அரியர்ஸ் வழங்கும் யோசனை இல்லை என்று ஜூலை மாதம் மத்திய அரசு தெளிவுபடுத்தியது. ஆனால் தொடர் கோரிக்கை மற்றும் ஓய்வூதியதாரர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதம் காரணமாக இந்த விஷயம் தற்போது பரிசீலனையில் உள்ளது இனி இந்த விஷயத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும்.
18 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்க வேண்டுமென கோரிக்கை
ஊழியர்களின் 18 மாத நிலுவைத் தொகையை குறித்து கவுன்சிலின் கோரிக்கையை அரசு பரிசீலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏழாவது ஊதிய குழுவின் கீழ் மத்திய அரசு ஊழியர்களுக்கு முப்பத்தி ஒரு சதவீத அகவிலைப்படி மற்றும் பல பெரிய சலுகைகள் வழங்கியதே ஆனால் நிலுவைத்தொகை பிரச்சனை இன்னும் முடிக்கப்படாமல் இருக்கிறது.
தேசியம் செயலாளர் சிவ கோபால் மிஸ்ராவும் இதுகுறித்து தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார். 18 மாதங்களாக நிலுவையிலுள்ள அகவிலைப்படி நிலுவைத் தொகையை ஒரே முறை செலுத்த வேண்டும் என்று கோரிக்கையும் எழுந்துள்ளது. டிசம்பரில் அமைச்சரவை செயலாளருடன் இதுகுறித்து விவாதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. செலவினம் துறையின் ஆண்டு அறிக்கையின்படி நாட்டில் மொத்தம் 48 லட்சம் மத்திய ஊழியர்களும் 60 லட்சம் ஓய்வூதியதாரர்களும் உள்ளனர்.
இந்திய ஓய்வூதியர் மன்றம் பிரதமர் நரேந்திர மோடிக்கு அக்டோபர் மாதம் கடிதம் எழுதியது ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி நிவாரணத்தை நிறுத்துவதற்கான முடிவு சரியல்ல என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் வாழ்வாதாரத்திற்கு 18 மாத பணம் மிகவும் முக்கியமானதாகும் அதை நிறுத்துவது அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்
FOR MORE INFORMATION SUBSCRIBE TO : All Circular Rk (https://www.youtube.com/channel/UCY73wZhAmM9Ik3Slluk_YgA.)
THANKYOU💚


<< Home