Saturday, 7 January 2023

91 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி.. சூரிய குமார் யாதவ் சாதனை... இந்தியா தொடர்ந்து 11 முறை சாதனை

ராஜ்கோட் : இலங்கைக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் வெறறி பெற்றது. இதன் முலம் தொடரை இந்திய அணி 2க்கு1 என்ற கணக்கில் வெற்றி பெற்ரது.


டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது இதில் இந்திய அணி எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தியது.தொடக்க வீரராக களமிறங்கிய இஷான் கிஷன் 1 ரன்னில் ஆட்டமிழக்க இந்தியாவுக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது.

இதனையடுத்து ராகுல் திரிபாதி அதிரடியாக விளையாடி 16 பந்துகளில் 35 ரன்களை விளாசினார். இதில் 5 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும். இதனையடுத்து சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டது. 26 பந்துகளில் அரைசதம் கடந்த சூர்யகுமார் யாத்வ், பிறகு மகீஷ் தீக்சணா ஓவரில் 2 சிக்சர், பவுண்டரி அடித்து 19 ரன்கள் சேர்த்தார்.



மறுபுறம் சுப்மான் கில், ஹர்திக் பாண்டியா மற்றும் தீபக் ஹூடா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்த தன்னுடைய 360 டிகிரி ஷாட்டை ஆடிய சூர்யகுமார் 45வது பந்தில் தனது 3வது சதத்தை பூர்த்தி செய்து அசத்தினார். இறுதியில் 51 பந்துகளில் 112 ரன்களை சூர்யகுமார் குவித்தார். அக்சர் பட்டேல் தன் பங்கிற்கு 9 பந்துகளில் 21 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் 20 ஓவர் முடிவில் இந்திய அணி 228 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.


229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர் குசேல் மெண்டிஸ் 2 சிக்சர், 2 பவுண்டரிகள் விளாசி 23 ரன்கள் எடுத்து அக்சர் பட்டேல் பந்துவீச்சில் பெவிலயன் திரும்பினார். இதன் பிறகு இலங்கை அணிக்கு சரிவு தான் தொடங்கியது. பெர்னான்டோ 1 ரன்னில் வெளியேற,நிசாங்கா 15 ரன்கள் மட்டுமே சேர்த்து ஆட்டமிழந்தார்.


தனஞ்செய்ய டி சில்வா, அசலங்கா ஆகியோர் போராடி ரன்களை சேர்த்தாலும் சாஹல் பந்துவீச்சில் முக்கிய கட்டத்தில் வெளியேறினார். இதனையடுத்து களமிறங்கிய இலங்கையின் பின்வரிசை வீரர்கள் அடுத்தடுத்து வெளியேற, இலங்கை அணி 137 ரன்களில் ஆட்டழிந்ததது. இதன் மூலம் 91 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி தொடரையும் வென்றது. இது இந்தியாவின் டி20 கிரிக்கெட்டில் 4வது மிகப் பெரிய வெற்றியாகும். ஆர்ஸ்தீப் சிங் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி கம்பேக் கொடுத்தார். டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி சொந்த மண்ணில் தொடர்ந்து 11வது டி20 தொடரை வென்றது.

Labels: , ,

Wednesday, 14 December 2022

அர்ஜென்டினாக்கு இப்படி ஒரு கஷ்டம் இருக்க?


அர்ஜென்டினா அணிக்காக விளையாடி வரும் லியோனல் மெஸ்ஸிக்கு இதுவே கடைசி வேர்ல்டு கப் மேட்ச் ஆகும். இதற்கு பிறகு நான் வேர்ல்டு கப் மேட்ச் இல் விளையாட மாட்டேன் என்று இருதியாக சொல்லி விட்டார். அதனாலே அர்ஜென்டினா அணியில் உள்ள அனைத்து பிளேயர்கலும் மெஸ்ஸி காக இந்த உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்று முனைப்போடு இருக்கிறார்கள்.
ஆனால் மறுபக்கம் இருக்கும் பிரான்ஸ் அணி மிகவும் வலிமையாக இருக்கிறது. அதில் உள்ள கிலியன் mbabey அர்ஜென்டினா அணிக்கு மிகவும் சவாலாக இருப்பார் என்று முன்னாள் கால்பந்து வீரர் ரொனால்டோ நசாரியோ கூறி உள்ளார்.
மேலும் அர்ஜென்டினா அணிக்கு உலக கோப்பை ஒரு கனவாகவே இருக்கும் என்று கூறி உள்ளார். 
பிரண்ட்ஸ் ஏற்கனவே முன்னதாக நடந்த உலகக் கோப்பையை கைப்பற்றி நடப்பு சாம்பியனாக இருப்பது குறிபபிடத்தக்கது.

Labels: , , , , , ,

Sunday, 19 December 2021

2022ல் சம்பளம் அதிகரிக்கலாம்.. லட்சக்கணக்கான அரசு ஊழியர்களுக்கு சூப்பர் நியூஸ்..!

    மத்திய அரசு ஊழியர்களின் சம்பள விகிதத்தில் அடுத்த ஆண்டு முதல் பெரியளவிலான மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


    
    கொரோனா காரணமாக மத்திய அரசு பல லட்சம் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை நிறுத்தி வைத்துள்ளது. இந்த அகவிலைப்படியானது வரும் ஜனவரி முதல் திரும்ப கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா காலத்தில் அரசு ஊழியர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்ட நிலையில், இது எப்போது வரும் என்ற பலத்த எதிர்பார்ப்பு ஊழியர்கள் மத்தியில் நிலவி வருகின்றது.

    கொரோனா காலத்தில் அரசு ஊழியர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்ட நிலையில், இது எப்போது வரும் என்ற பலத்த எதிர்பார்ப்பு ஊழியர்கள் மத்தியில் நிலவி வருகின்றது.

    இது குறித்து வெளியாக தகவல்கள் வரவிருக்கும் ஆண்டு தொடக்கத்தில் டிஏ(DA) விகிதமானது மீண்டும் 3% அதிகரிக்கலாம் என கூறுகின்றது. இதன் காரணமாக மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியானது 34% ஆக அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது விரைவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரியளவில் நிவாரணத்தினை வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் அரசு 18 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகை குறித்தும் விரைவில் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கிராக்கிப்படி விகிதமானது முன்னதாக 17% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் தான் இந்த விகிதம் 3% அதிகரிக்கப்பட்டது. இதற்கு ஒப்புதலும் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இது விகிதமானது விரைவில் ஊழியர்களுக்கு செலுத்தப்படலாம் என தெரிகிறது. அரசின் இந்த சலுகைகள் கிடைக்கும் பட்சத்தில், அரசு ஊழியர்கள் சம்பளத்தில் பெரிய ஏற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


THANKS FOR READING THIS ARTICLE

Friday, 17 December 2021

பிஎஃப் வாங்குபவர்களின் கவனத்திற்கு பின் பலன்கள் நிறுத்தப்பட்டுள்ளது முக்கிய அறிவிப்பு

வருங்கால வைப்பு நிதி அமைப்பு வாங்குபவர்கள் வருகின்ற டிசம்பர் 31ஆம் தேதிக்குள் தங்களது பிஎஃப் கணக்கில் நாமினியை இணைத்து இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கூடுதல் விவரங்களை இந்த பதிவில் காணலாம்.
 
 
How to check Pf (Provident Fund) balance in India | Business Insider India

 

EPFOHO அறிவிப்பு

அனைத்து தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு சந்தாதாரர்கள் வரும் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் தங்களது கணக்கில் சில மாறுதல்களை செய்யவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இல்லை என்றான் புதிய விதிகள் அடுத்த ஆண்டு அமலுக்கு வரும் என்று ஈபி எஃப்ஃபோ அமைப்பு தனது சந்தாதாரர்களை எச்சரித்துள்ளது. அதாவது நீ பிஎஃப் அமைப்பின் ஊழியர்கள் டிசம்பர் 31ம் தேதிக்கு முன்னால் தங்களது கணக்குடன் நாமினியை கட்டாயம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த அறிவுரைகள் செயல்படுத்தப்பட்டால் பிஎஃப் பயனர்கள் ஓய்வூதிய பலன்கள் உள்ளிட்ட சில சேவைகளை இழக்க நேரிடும் என்று எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மாத சம்பளம் பெறும் அனைத்து ஊழியர்களும் தங்களது எதிர்கால சேமிப்பதற்காக இபிஎப்ஓ அமைப்பில் கணக்கு வைத்துள்ளனர். ஒவ்வொரு மாதமும் ஊழியர்கள் பெறும் மாத சம்பளத்தில் ஒரு சிறிய பகுதி பிஎஃப் இதில் இணையும் அவர்கள் அவசரமான தேவையோ அல்லது அந்த வேலையில் இருந்து ஓய்வு பெறுவது நல்லது வேலையை மாற்றுவது போன்ற காரணங்களாக இருந்தாலும் அவர்கள் செல்லும் போது அந்த பிஎஃப் பேலன்ஸ் அவர்களுக்கு கிடைக்கும்.
 
THANKS FOR READING💘

Thursday, 16 December 2021

EPF பேலன்ஸ் செக் பண்ணுவது எப்படி?

பிஎஃப் இருப்பு தொகை நான்கு முறைகளில் தெரிந்துகொள்ளலாம் அவற்றை இந்தத் தொகுப்பில் காணலாம்.

 EPF Balance Check Through SMS, Missed Call, Online; Check Numbers, Direct  Link


1. முதல் முறை - 7738299899  'EPFOHO UAN  LAN' என்று டைப் செய்து எஸ்எம்எஸ் அனுப்பினால் உங்களுக்கு உங்களுடைய பிஎஃப் பேலன்ஸ் எஸ்எம்எஸ் வழியாக வந்தடையும்.
 
 PF Balance Check | EPFO Members

2. இரண்டாவது முறை - 011-22901406 என்ற எண்ணிற்கு தொலைபேசியின் வழியாக கால் செய்தால் உங்களுடைய பேலன்ஸ் இருப்புத் தொகை தெரிந்துவிடும். அதாவது கால் பண்ணியவுடன் அவர்கள் உங்களுடன் பேசுவார்கள், அதன் பிறகு உங்களுக்கு வேண்டிய தகவல்களை கேட்டபிறகு அவர்கள் உங்களுக்கான தகவல்களை அளிப்பார்கள்.
 
 PF Balance Check by Missed Call: Toll Free Enquiry Number/ know your PF UAN  number through mobile no - YouTube
 

3. மூன்றாவது முறை - EPF PASSBOOK PORTAL என்ற இணைய தளத்தில் உங்களது யுஏஎன் ஐஐடி மற்றும் பாஸ்வேர்டு உள்ளிட்டவை அளித்து உங்களுடன் இருப்புத் தொகையை எளிமையான முறையில் அறிந்து கொள்ளலாம்.
 
 EPFO | Member Passbook & Claim Status

4. நான்காவது முறை - EPFO என்ற இணையதளத்தில் நுழைந்து பிறகு எம்பிளாய் சென்ட்ரிக் சர்வீஸ் அதற்குள் நுழைந்து பிறகு செலக்ட் வியூ பாஸ் புக் அதனுள் உங்களுடைய யுஏஎன் ஐடி மற்றும் பாஸ்வேர்டை உள்ளீடு செய்து உங்களது இருப்புத் தொகையை அறிந்து கொள்ளலாம்.
 
 
 EPFO portal login: How you can log in to your account | Step by step guide  to login on EPFO e-sewa portal
 
 
THANKS FOR READING THIS ARTICLES💓 

KEEP SUPPORTING😍
 
 

Wednesday, 15 December 2021

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் 10 லட்சம் பேர் பங்கேற்பு

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதை எதிர்த்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

 2- day bank strike coming week: SBI branches, ATM services may be hit


        பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவது குறித்து கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட நிதித்துறை பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்தது. அந்த அறிவிப்பின் அடிப்படையில் இரண்டு வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கான முதல் கட்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
 
 Bank Strike: எஸ்பிஐ, இந்தியன் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்
    
            இதன்படி இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவது தொடர்பான வங்கிகள் சட்டத் திருத்த மசோதா 2021 நடப்பு நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

            இதற்கிடையில் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நாடு தழுவிய அளவில் இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
          
      இந்நிலையில் நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். வங்கிகள் தனியார்மயமாக்கபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் நாடு முழுவதும் சுமார் 10 லட்சம் ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர்.
 
 10 logo designs of Government of India setups or companies - Best Logo and  Packaging Design Ideas | LogoPeople India Blog

   வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான வங்கிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பரிவர்த்தனைகள் பாதிக்கப்பட்டுள்ளன. வங்கி சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் வணிகர்கள் தொழில் அதிபர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
 
THANKS FOR READING THIS ARTICLE
 
KEEP SUPPORTING💚


முப்படை தளபதிகள் குழுவின் தலைவரானார் மனோஜ் முகுந்து நரவானே…

முப்படை தளபதிகள் குழுவின் தலைவராக ராணுவ தளபதி எம்என் நரவானே நியமிக்கப்பட்டுள்ளார்.

 Manoj Mukund Naravane Age, Caste, Wife, Family, Biography & More »  StarsUnfolded


        சமீபத்தில் நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முன்னாள் இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர் தற்போது அவர் இறந்ததை முன்னிட்டு புதிதாக முப்படை தலைமை தளபதி ஆக எம் ஏ நரவானே நியமிக்கப்பட்டுள்ளார்.
 
 CDS & 3 chiefs must speak in cryptic military language and not get provoked  by Indian media

        முப்படைகளின் தலைமை தளபதியாக இருந்த பிபின் ராவத் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தா நாடு முழுவதும் அவருடைய இறப்புக்கு இரங்கல் தெரிவித்தது இந்நிலையில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் காலமான நிலையில் இடைக்கால ஏற்பாடாக முப்படைத் தளபதிகளின் குழுவின் தலைவராக இராணுவத்தளபதி எம்எ நரவானே நியமிக்கப்பட்டுள்ளார்.

        முப்படைத் தளபதிகள் மூத்தவர் என்ற அடிப்படையில் குழுவின் தலைவராக அரவாணி நியமிக்கப்பட்டுள்ளார். முப்படைகளின் தலைமைத் தளபதி தேர்வு செய்யப்படும் வரை குழுவின் தலைவராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
THANKS FOR READING THIS ARTICLE💛
 
KEEP SUPPORTING ...

ஒரு ரூபாய் ரீசார்ஜ் செய்தால் போதும் புதிய பிளானினை அறிமுகம் செய்த ஜியோ... அதிர்ச்சியில் ஏர்டெல்!..

ஜியோவின் அதிரடி ஆஃபர் அதிர்ச்சியில் ஏர்டெல் யூசர்ஸ்…

 At ₹1, Reliance Jio's latest data pack is the cheapest in the world – costs  less than a packet of water | Business Insider India


சமீப காலமாக அனைத்து நெட்வொர்க்குகளிலதங்களுடைய ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட் பெய்ட் கட்டணங்களை பன்மடங்காக உயர்த்தியுள்ளன. இந்தநிலையில் ஜியோ தங்களுடைய புதிய ஆஃபரை கொண்டு வந்து இதர நெட்வொர்க்குகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
 
Reliance Jio Silently Introduces Rs 1 Prepaid Plan


    இந்திய டெலிகாம் நிறுவனங்களில் மிகவும் மலிவான விலையில் ப்ரீபெய்டு ரீசார்ஜ் பிளானை அறிமுகம் செய்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இதன் மூலம் நாட்டிலேயே குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டத்தை வழங்கும் நிறுவனமாக ஜியோ மாறியுள்ளது.

30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த ரீசார்ஜ் பிளான் 100 எம்பி மொபைல் டேட்டா கிடைக்கும் என தெரிவித்துள்ளது. ஜியோ இந்த பிளானிங் விலை வெறும் ஒரு ரூபாய் மட்டுமே. ஜியோ வாடிக்கையாளர்கள் அந்த 100 எம்பி டேட்டாவை பயன்படுத்திய பின்னர் அவர்களது இணைய இணைப்பின் வேகம் 65 கிலோ பைட் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 Jio vs Airtel vs Vodafone vs Idea vs BSNL vs Aircel: The Best Data, Calling  Plans Available Today | NDTV Gadgets 360


இந்த ரீசார்ஜ் மை ஜியோ அப்ளிகேஷன் மூலமாக மட்டுமே மேற்கொள்ள முடியும். அந்த அப்ளிகேஷனில் ரீசார்ஜ் வேல்யூ அதை பிளான்ட்ஸ் டே பை தேர்வு செய்து வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்து ரூபாய்க்கு ஒரு ஜிபி டேட்டா தரும் நிறுவனம் ஜியோ மட்டும்தான் எனவும் தெரிவித்துள்ளது.
 
THANKS FOR READING THIS ARTICLE💛
 
KEEP SUPPORTING...

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை பற்றி முதல்வர் வெளியிட்டுள்ள பகீர் தகவல்!. முடிவை மாற்றுவாரா முதல்வர்?

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது தொடர்பாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

 Rs 2,000 Corona Relief, Cheaper Milk & Transport: CM Stalin's 5 Significant  Announcements

      அரசு ஊழியர்கள் ஓய்வு பெரும் வயது தொடர்பாக தமிழ்நாடு அரசு என்ன முடிவு எடுக்கப் போகிறது என்று 10 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
 
 7th Pay Commission: Big relief for these Central Govt employees during  Coronavirus Pandemic; Check details | Business News – India TV

    அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58 ஆக இருந்த நிலையில் ஓய்வு பெறும்போது அவர்களுக்கான பண பலன்களை கொடுக்க முடியாமல் ஓய்வு பெறும் வயதை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு ஐம்பத்தி ஒன்பது ஆக உயர்த்தியது. இந்த ஆண்டு தொடக்கத்தில் வயது 60 ஆக உயர்ந்தது. அதற்கான அரசாணையை திமுக வெளியிட்டது ஜனவரி 5ஆம் தேதி சட்டப்பேரவையில் அதில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று தகவல்கள் வெளியாகிறது.
 
                                        Government of Tamil Nadu - Wikipedia

    ஓய்வு பெறும் வயதை நீடித்துக் கொண்டே சென்றாள் இளைஞர்களை வேலைவாய்ப்பு பாதிக்கப்படுகின்றது என்ற குற்றச்சாட்டு வலுவாக எழுந்துள்ளது. அதேசமயம் ஓய்வு நேர பணம் படங்களை கொடுத்த அரசிடம் போதிய நிதியில்லை என்று கூறுகிறார்கள்.

    எனவே 33 ஆண்டுகள் பணி புரிந்தவர்கள் 58 வயதில் ஓய்வு பெறுவார்கள், என்றும் மற்றவர்கள் 60 வயதில் ஓய்வு பெறுவார்கள் அரசு அறிவித்துள்ளது. 58 வயதில் ஓய்வு பெறுபவர்களுக்கு பண பலன்களை பாண்டு பத்திரமாக கொடுக்க அரசு நிர்ணயித்துள்ளது.
 
THANKS FOR READING THIS ARTICLE💛
 
 SUBSCRIBE TO ALL CIRCULAR RK

 
                                  All Circular RK - YouTube

RuPay டெபிட் கார்டு, BHIM UPI மூலமாக டிஜிட்டல் பரிவர்த்தனை செய்தால் ஊக்கப் பரிசு! மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அதிரடி அறிவிப்பு...

 RuPay டெபிட் கார்டு, BHIM UPI  மூலமாக டிஜிட்டல் பரிவர்த்தனை செய்தால் ஊக்கப் பரிசு! மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அதிரடி அறிவிப்பு..

 BHIM App Now Offers Cashback Worth Up to Rs. 750 to Customers | Technology  News

    சமீபகாலமாக பெரும்பான்மையான மக்கள் தங்களது வாழ்க்கைக்கு தேவையான மற்றும் இதர பரிவர்த்தனைகளை செய்வதற்கு ஆன்லைன் பரிவர்த்தனைகளை முழுமையாக பயன்படுத்துகின்றன. இதனால் பலவகையான ஆன்லைன் பரிவர்த்தனை அப்ளிகேஷன்கள் தினமும் புதிது புதிதாக பிறந்து கொண்டே இருக்கின்றன. இதற்கு இடையில் நீண்ட நாட்களாக இந்த வரிசையில் இருக்கும் சில அப்ளிகேஷன்கள் (GOOGLE PAY, PHONE PAY, PAYTM) இருக்கின்றன.

 Whatsapp, Paytm, BHIM, GPay, PhonePe — why retailers love them! | by Maria  Martin | Medium

    BHIM UPI  என்பது இந்தியாவில் மட்டுமே இந்தியர்களுக்கு என உருவாக்கப்பட்ட ஒரு பரிவர்த்தனை முறையாகும்.இதனைப் பயன்படுத்தியே அனைத்து விதமான ஆன்லைன் பரிவர்த்தனைகளும் நடைபெறுகின்றன. சமீபத்தில் மத்திய தொழில்நுட்பத்துறை ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதனை வெளியிட்டவர் மத்திய தொழில் துறை அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் அவர் அதில் அவர் கூறியிருப்பதாவது.,
 
    இந்திய பன்னாட்டு நிதி சேவைகள் மற்றும் கட்டண சேவை அமைப்பான ரூபே கார்டு, மற்றும் இந்திய மொபைல் பேமென்ட் அப்ளிகேஷன் ஆன BHIM UPI மூலமாக சிறிய அளவிலான பரிவர்த்தனைகளை செய்வதற்கு ஊக்கப்பரிசு என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 10 logo designs of Government of India setups or companies - Best Logo and  Packaging Design Ideas | LogoPeople India Blog
    இந்த சிறிய அளவிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகளை செய்யும் பயனர்களுக்கு ஊக்கப் பரிசு வழங்க 1300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வின் தெரிவித்துள்ளார். பரிவர்த்தனைகளை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
 
अश्विनी वैष्णव ashwini-vaishnav: Latest News, Photos and Videos of ashwini- vaishnav, अश्विनी वैष्णव हिंदी न्यूज़, इमेज और वीडियो | Page 1
     
        இதன் மூலம் BHIM UPI மற்றும் RuPay பயன்படுத்தும் நடுத்தர குடும்ப மக்கள் அனைவருக்கும் நல்ல பரிசு மத்திய அரசால் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். இது நடைமுறைக்கு வந்தபின் அனைவரும் பயன் பெறுவர்.
 
THANKS FOR READING THIS ARTICLE💗. 
 
FOLLOW FOR MORE UPDATES.

பென்ஷன் தாரர்களுக்கு மிக முக்கிய தகவல். ஆயுள் சான்றிதழுடன் புதிய முக அங்கீகார தொழில் நுட்ப்பம் கொண்டு சமர்பிப்பது எப்படி?

இந்திய அரசின் ஓய்வூதியத் துறை மற்றும் ஓய்வூதியதாரர்களின் நலன் சார்ந்த இந்திய அரசின் ஆதார், டிஜிட்டல் சமர்ப்பிப்புக்கான UIDAI ஆதார் மென்பொருளின் அடிப்படையில் முக அங்கீகார நுட்பத்தின் மூலம் டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழைச் சமர்ப்பிப்பதற்கான ஆதார்.  கீழே கொடுக்கப்பட்டுள்ள செயல்முறை ஓட்டம்:- பயன்படுத்தி மட்டும்

 



ஸ்டெப் 1:

    மேலே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தில் உள்ள அப்ளிகேஷனை உங்களது மொபைலில் டவுன்லோட் செய்யவும். அதன் பெயர் ஆதார் ஃபேஸ் ஆர் டி உங்களது மொபைலில் உள்ள ப்ளே ஸ்டோரில் இந்த ஆப் இலவசமா பதிவிறக்கிக்கொள்ளலாம்.
.
குறிப்பு: இந்த ஆப் முழுக்க முழுக்க ஆண்ட்ராய்டு மொபைலுக்காக வடிவமைக்கப்பட்டது.

ஸ்டெப் 2:

    ஆப்பை இன்ஸ்டால் செய்த பிறகு அதன் தோற்றம் மேலே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தில் இருப்பது போல காட்சியளிக்கும்.
 


ஸ்டெப் 3:

    ஆதார் ஃபேஸ் ஆர் டி அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து முடித்தவுடன் அடுத்து அப்ளிகேஷனாக மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் உள்ள ஜீவன் பிரமான் ஃபேஸ் ஐ டவுன்லோட் செய்யவும். மேலும் இந்த அப்ளிகேஷன் ப்ளே ஸ்டோரில் இருக்காது இதனை கூகுள் குரோமில் பதிவிறக்கம் செய்யவும்.
 

ஸ்டெப் 4:

    இதில் நீங்கள் டவுன்லோட் செய்து வைத்திருந்த ஜீவன் பிரமான் இல் கேட்கப்படும் தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும். அதாவது உங்களுடைய ஈமெயில் ஐடி மற்றும் அதில் கொடுக்கப்பட்டுள்ள கேப்ட்சா வை சரியாக பூர்த்தி செய்யவும் இதனை செய்து முடித்தவுடன் உங்களது இமெயிலுக்கு ஒரு மெயில் வரும். அதனை டவுன்லோட் செய்து வைத்துக் கொள்ளவும் டவுன்லோட் செய்த பைலை இன்ஸ்டால் செய்யவும்.
 

ஸ்டெப் 5:

    அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்தவுடன் உங்களது ஆதார் ஐடி, அல்லது விர்சுவல் ஐடி கேட்கும். அதனை சரியாக பூர்த்தி செய்யவும். பின்னர் உங்களது பத்து இலக்க மொபைல் நம்பரை பூர்த்தி செய்யவும். உங்களுக்கு OTP ஒன்று வரும் அதனை சரியாக பூர்த்தி செய்யவும். பிறகு உங்களது முகத்தை ஸ்கேன் செய்யவும். இதற்குப் பிறகு கிளைன்ட் ரிஜிஸ்டர் சக்சஸ்ஃபுல் என்று திரையில் தெரியும்.
 

ஸ்டெப் 6:

1. ஆபரேட்டர் அங்கீகாரம் என்பது ஒரு முறை செயல்முறையாகும். 
2. ஓய்வூதியம் பெறுபவர் ஆபரேட்டராகவும் இருக்கலாம்.  
3.ஆபரேட்டர் அங்கீகாரத்திற்குப் பிறகு, ஓய்வூதியம் பெறுபவர் அங்கீகாரத்திற்கான திரை திறக்கும்.  
4. ஒரு ஆபரேட்டர் பல ஓய்வூதியதாரர்களின் DLC ஐ உருவாக்க முடியும்.

ஸ்டெப் 7:

பென்ஷன் பெறுபவர் உடைய அனைத்து விதமான தகவல்களையும் உள்ளீடு செய்யவும் பிறகு OTP சரியாக உள்ளீடு செய்யவும்.

ஸ்டெப் 8:

உங்களது அனைத்து விதமான தகவல்களையும் அதாவது பிபிஓ நம்பர் மற்றும் அக்கவுண்ட் நம்பர் ஆகியவைகளை தவறு இல்லாமல் உள்ளீடு செய்யவும். பிறகு கீழே உள்ள 2 சிறிய கட்டங்களுக்கும் சரி என்று டிக் அடிக்கவும். அனைத்தையும் நன்றாக படித்து பார்த்துவிட்டு டிக் கடிக்கவும். ஒரு சிறு தவறு இருந்தாலும் உங்களுடைய அப்டேஷன் கேன்சல் ஆகிவிடும் எனவே பூர்த்தி செய்யும்பொழுத கவனத்துடன் செய்யவும்.

ஸ்டெப் 9:

செக் பாக்ஸ் டைப செய்து கன்ஃபார்ம் செய்து கொள்ளவும் பிறகு ஸ்கேன் ஃபார் லைவ் போட்டோகிராபி கிளிக் செய்யவும்.

ஸ்டெப் 10

ஸ்கேன் பார் லைவ் போட்டோகிராபி கிளிக் செய்தவுடன் ஒரு பாப் அப் விண்டோ வரும் அதில் நீங்கள் உங்கள் முகத்தை ஸ்கேன் செய்ய விரும்புகிறீர்களா என்று கேட்டிருக்கும் அதற்கு எஸ் என்று பதில் அளிக்கவும்.

ஸ்டெப் 11

மீண்டும் செக் பாக்ஸ் ஐ கிளிக் செய்து தொடரவும்.

ஸ்டெப் 12

பிறகு உங்களது மொபைலின் முன்பக்க கேமரா ஓப்பன் ஆகிவிடும். அதில் உங்களது முகத்தை ஸ்கேன் செய்யவும். அதாவது மேலேயும் கீழேயும் உன் முகத்தை அசைக்காமல் சரியான வழி ஸ்கேன் செய்து கொள்ளவும்.

ஸ்டெப் 13

பேஸ் ஸ்கேனிங் முடித்தவுடன் உங்களது டி எல் சி சப்மிஷன் திரையில் தெரியும், அதோடு உங்களுடைய பிரமான் ஐடி, மற்றும் பிபிஓ நம்பர் ஆகியவை திரையில் தெரியும். இது அனைத்தையும் சரியாக செய்தால் ரிஜிஸ்ட்ரேஷன் செய்துவிடலாம் நன்றி...
 
 
 FOR MORE INFORMATION SUBSCRIBE TO: All Circular Rk 
 
All Circular RK - YouTube  
KEEP SUPPORTING FRIENDS💙...

Tuesday, 14 December 2021

7th pay Commission, பம்பர் செய்தி அகவிலைப்படி அரியர் குறித்த முக்கிய அப்டேட்!...

18 மாதங்களாக நிலுவையிலுள்ள அகவிலைப்படி நிலுவைத் தொகையை ஒரே முறை கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.


 

        மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிவாரண செய்தி வந்துள்ளது. 18 மாத அகவிலைப்படி நிலுவை குறித்து மோடி அரசு விரைவில் முடிவெடுக்கும். அகவிலைப்படி தற்போது 31 சதவீதமாக உள்ளது, ஆனால் ஜூலைக்கு முன் இது 17 சதவீதமாக இருந்து கொரோனா பெருந்தொற்று காரணமாக அகவிலைப்படி 2020ஆம் ஆண்டு முடக்கப்பட்டது. நிலமை சற்று சீராகவே இது ஜூலை 1ஆம் தேதிக்கு முன்பு இருபத்தி எட்டு சதவீதமாகவும் பின்னர் முப்பத்தி ஒரு சதவீதமாகவும் அதிகரிக்கப்பட்டது. ஆனால் ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரையிலான அகவிலைப்படி நிலுவைத் தொகை இன்னும் பெறப்படவில்லை.

கிறிஸ்துமஸுக்கு முன் பெரிய அப்டேட் வரக்கூடும்


        அமைச்சரவை செயலாளருடன நடைபெறும் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பரில் கிறிஸ்துமஸுக்கு சற்றுமுன் அமைச்சரவை செயலாளருடன ஒரு சந்திப்பு இருக்கலாம். அதில் இந்த பிரச்சனை விவாதிக்கப்பட உள்ளது. இருப்பினும் மத்திய ஊழியர்களுக்கு d.a. அரியர்ஸ் வழங்கும் யோசனை இல்லை என்று ஜூலை மாதம் மத்திய அரசு தெளிவுபடுத்தியது. ஆனால் தொடர் கோரிக்கை மற்றும் ஓய்வூதியதாரர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதம் காரணமாக இந்த விஷயம் தற்போது பரிசீலனையில் உள்ளது இனி இந்த விஷயத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும்.

18 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்க வேண்டுமென கோரிக்கை

 

 PM Modi seeks review of plans to ease international travel curbs amid new  Omicron strain


        ஊழியர்களின் 18 மாத நிலுவைத் தொகையை குறித்து கவுன்சிலின் கோரிக்கையை அரசு பரிசீலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏழாவது ஊதிய குழுவின் கீழ் மத்திய அரசு ஊழியர்களுக்கு முப்பத்தி ஒரு சதவீத அகவிலைப்படி மற்றும் பல பெரிய சலுகைகள் வழங்கியதே ஆனால் நிலுவைத்தொகை பிரச்சனை இன்னும் முடிக்கப்படாமல் இருக்கிறது.

        தேசியம் செயலாளர் சிவ கோபால் மிஸ்ராவும் இதுகுறித்து தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார். 18 மாதங்களாக நிலுவையிலுள்ள அகவிலைப்படி நிலுவைத் தொகையை ஒரே முறை செலுத்த வேண்டும் என்று கோரிக்கையும் எழுந்துள்ளது. டிசம்பரில் அமைச்சரவை செயலாளருடன் இதுகுறித்து விவாதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. செலவினம் துறையின் ஆண்டு அறிக்கையின்படி நாட்டில் மொத்தம் 48 லட்சம் மத்திய ஊழியர்களும் 60 லட்சம் ஓய்வூதியதாரர்களும் உள்ளனர்.

இந்திய ஓய்வூதியர் மன்றம் பிரதமர் நரேந்திர மோடிக்கு அக்டோபர் மாதம் கடிதம் எழுதியது ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி நிவாரணத்தை நிறுத்துவதற்கான முடிவு சரியல்ல என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் வாழ்வாதாரத்திற்கு 18 மாத பணம் மிகவும் முக்கியமானதாகும் அதை நிறுத்துவது அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்
 
 
FOR MORE INFORMATION SUBSCRIBE TO : All Circular Rk (https://www.youtube.com/channel/UCY73wZhAmM9Ik3Slluk_YgA.)
 
THANKYOU💚 
                                              All Circular RK - YouTube
                                                        

Monday, 13 December 2021

புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை? புத்தாண்டு பரிசாக மாணவர்களுக்கு அதிர்ச்சித் தகவல் அளித்த அரசு.

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை ஜனவரி முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறப்பு.

        தமிழகத்தில் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தை தடுக்கும் வகையில் டிசம்பர் 31, மற்றும் ஜனவரி 1 ஆகிய நாட்களில் அனைத்து கடற்கரைகளிலும் மக்கள் கூட தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 3, முதல் ஆறாம் வகுப்பு துவங்கி பிளஸ் டூ வரை சுழற்சிமுறை ரத்து செய்யப்பட்டு வழக்கமான நேரத்திற்கு பள்ளியில் செயல்படும என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

MK Stalin Signs 5 Orders On Day 1 As TN CM; Free Bus Travel For Women,  COVID Aid Approved
 
        தமிழகத்தில் பண்டிகை காலங்களில் தொற்று பரவலை கட்டுப்படுத்த எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு.
 
 New Year 2021: Government's 'gifts' to citizens of India | Mumbai Mirror

1. ஊரடங்கு கட்டுப்பாடுகள் டிசம்பர் 31 வரை நீக்கப்படுகின்றன. சமூக, கலாச்சார, அரசியல் கூட்டங்கள் போன்ற நிகழ்வுகளுக்கு தடை தொடரும்.
2. தோற்று பரவால்லை கட்டுப்படுத்தும் வகையில் டிசம்பர் 31, மற்றும் ஜனவரி 1 ஆகிய நாட்களில் அனைத்து கடற்கரைகளிலும் மக்களுக்கு அனுமதி இல்லை.
3. நீச்சல் குளங்கள் செயல்படலாம் அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் அனைத்திற்கும் கூட்டங்களை பயன்படுத்தலாம்.
4. ஜனவரி 3 முதல் அனைத்து பள்ளிகளிலும் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை சுழற்சிமுறை இன்றி வழக்கமான நேரத்திற்கு செயல்படும். அனைத்து கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனங்கள் இயல்பாக செயல்படும்.
5. கடைகளில் நுழைவுவாயிலில் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். உடல் வெப்பநிலையை பரிசோதனை கருவிகள் பரிசோதனை செய்ய வேண்டும்.

முகக் கவசம் கட்டாயம்

        தொற்று பரவல் கட்டுக்குள் இருந்தாலும் அண்டை மாநிலங்களில் கரோனா வைரஸ் பரவி வருகிறது. பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் இருப்பதால் தொற்று பரவல் அதிகரிக்கக் கூடும். எனவே பொதுமக்கள் அனைவரும் எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் இவ்வாறாக முதல்வர் கூட்டத்தில் கூறியுள்ளார்.
 
 SUBSCRIBE FOR MORE INFORMATION : All Circular Rk
 
THANK YOU FRIENDS KEEP SUPPORTING US💝